tamil

அலங்காநல்லூர் பேரூராட்சி சார்பில் காந்தி ஜெயந்தி விழா

Executive Officer Chinnaswamy Pandian on behalf of the Alankanallur Municipality of Madurai District paid homage to the portrait of Mahatma Gandhi on the occasion of Gandhi Jayanti by wearing a garland.

அலங்காநல்லூர், அக். 4-

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சி சார்பில் காந்தி ஜெயந்தியையொட்டி மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு செயல் அலுவலர் சின்னசாமி பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் வரித்தண்டலர் கண்ணன், இளநிலை உதவியாளர் ராஜா, மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் தூய்மைப் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

tamil

தொடர்ந்து கோமாதா பெண்கள் கூட்டமைப்பின் கீழ் செயல்படும் மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் திடக்கழிவு மேலாண்மை திட்டம், தூய்மை இந்தியா இயக்க திட்டம், கொரோனா தடுப்பு நடவடிக்கை, வடகிழக்கு பருவமழை, குடிநீர் விநியோகம், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை, பிளாஸ்டிக் ஒழிப்பு, மழைநீர் சேகரிப்பு போன்ற பணிகளை வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு பேரூராட்சி நிர்வாகத்தினர் துண்டுப்பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு செய்தனர்.

இதைதொடர்ந்து தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டது. மேலும் குறவன்குளம், முனியாண்டிபுரம் சாலையோரங்களில் பேரூராட்சி சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டு வீடுகள் தோறும் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது….

Follow us on Google News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top