tamil

சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் படிப்படியாக கடைகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது: ஓ பன்னீர்செல்வம்

.சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் படிப்படியாக கடைகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் திரு ஓ பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று சென்னையில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட பின்னர் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

உணவு தானிய மொத்த விற்பனை அங்காடி அடுத்த மாதம் 18-ஆம் தேதியும், காய்கறி மொத்த விற்பனை அங்காடி அடுத்த மாதம் 28-ஆம் தேதியும் திறக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து பூக்கடைகளும், பழக்கடைகளும், சில்லறை காய்கறி விற்பனை கடைகளும் திறக்கப்படும் என்றும் திரு ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Follow us on Google News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top